Friday 26th of April 2024 07:30:58 AM GMT

LANGUAGE - TAMIL
உயிரிழப்பு 145!
தமிழ்நாட்டில் இன்றும் 827 பேருக்கு தொற்று: 20 ஆயிரத்தை நெருங்கியது  கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்றும் 827 பேருக்கு தொற்று: 20 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு!


தமிழ்நாட்டில் இன்றும் புதிதாக 827 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 372 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சிகிச்சையின் பின்னர் 639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தமாக 10,548 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம். பாதிப்பு எண்ணிக்கையை வைத்து அச்சப்பட தேவையில்லை என அவர் மேலும் தெரிவத்துள்ளார்.

இதேவேளை, சென்னையில் மட்டும் இன்று 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 12 ஆயிரத்து 762 ஆக உயர்வடைந்துள்ளது. அதே நேரம் சென்னையில் மட்டும் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 145 ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE