இந்தியா முழுவதும் 5வது கட்டமாக நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன்-30 ம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மார்ச் 25-ந்தேதியில் இருந்து பொது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. 4-வது கட்ட பொது ஊரடங்கு நாளையுடன் (மே-31) முடிவடைகிறது. இந்நிலையில் 5-வது கட்ட நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன்-30ம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மார்ச் 25-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 14-ந்தேதி வரைக்கும், ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து மே 3-ந்தேதி வரைக்கும், மே 4-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரைக்கும், அதன்பின் மே 31-ந்தேதி வரைக்கும் என நான்கு கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா