நீதி கோரிப் போராடும் சொந்த நாட்டு மக்கள் மீது வன்முறைகளை ஏவி விடுவதை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து ஒலிக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக உங்கள் குரல் உலகத்துக்குக் கேட்கிறது. ஒடுக்கப்படும் அமெரிக்க மக்களுடன் உலகம் நிற்கிறது என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் மவுசவி நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளா் மாநாட்டில் கூறினாா்.
உங்கள் மக்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துங்கள். அவர்கள் மூச்சு விட அனுமதியுங்கள் என அமெரிக்க அரசு மற்றும் அந்நாட்டுப் பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கிறோம் எனவும் அவா் தெரிவித்தாா்.
அமைதியான, கௌரவமான மற்றும் அதிக வன்முறையை நாடாத அமெரிக்க மக்கள் வன்முறையைப் பிரயோகித்து கண்மூடித்தனமாக ஒடுக்கப்பட்டு வருவதைக் கண்டு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
ஈரானின் நீண்டகால எதிரியான அமெரிக்கா உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வன்முறை மற்றும் கொடுமைப்படுத்துதல்களைத் தொடா்ந்து வருகிறது எனவும் அப்பாஸ் மவுசவி குற்றஞ்சாட்டினாா்.