Thursday 25th of April 2024 11:34:14 PM GMT

LANGUAGE - TAMIL
-
கவன ஈர்ப்பு போராட்டம்

கவன ஈர்ப்பு போராட்டம்


6 மாதங்களிற்கு கடன் அறவீடு மேற்கொள்ளப்படாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு கோரி நேற்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று பகல் 1.30 மணியளவில் குறித்த கவன ஈர்ப்பு போராட்டம் கிளிநொச்சி பூநகரி வலைப்பாடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க இளைஞர் யுவதிகளினால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியில் கடன் அறவீடுகளை 6 மாதங்களிற்கு மேற்கொள்ளாதிருப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தொடர்ந்தும் கடன் அறவீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அறவீடு மேற்கொள்ளாது இருப்பதை உறுதி செய்யுமாறு தெரிவித்தே குறித்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE