கொழும்பு-கண்டி பிரதான வீதியில் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
பெண் ஒருவர் அவரின் கணவருடன் வீதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது வீதியில் பயணித்த வான் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது படுகாயமடைந்த பெண் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய வயோதிப பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நாளை (ஜூன்-16) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.