ஹெரோயின் 274 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியான தேவாகே துசித குமார எனும் குடு திலான் என்பவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீண்ட விசாரணையின் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி குறித்த நபர் பத்தரமுல்ல பகுதியில் வைத்து ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் சட்டமா அதிபரினால் குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த நபருக்கு எதிராக எவ்வித சந்தேகங்களும் இன்றி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.