Friday 26th of April 2024 01:45:10 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை பொதுத்தேர்தல்-2020: தபால் வாக்கு சீட்டு விநியோகம் இன்று முதல் ஆரம்பம்!

இலங்கை பொதுத்தேர்தல்-2020: தபால் வாக்கு சீட்டு விநியோகம் இன்று முதல் ஆரம்பம்!


நடைபெறவுள்ள இலங்கை பொதுத்தேர்தல்-2020 இற்கான தபால் வாக்கு சீட்டு விநியோகம் மற்றும் தபாலிற்கு ஒப்படைக்கும் நடவடிக்கை இன்று (ஜூன்-30) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினமும் இந்த நடவடிக்கை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிக்க 77 இலட்சத்து 53 ஆயிரத்து 37 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் 77 இலட்சத்து 5 ஐயாயிரத்து 85 பேரிற்கு மட்டுமே அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

47 ஆயிரத்து 430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE