நடைபெறவுள்ள இலங்கை பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்காக ஜூலை 13 ஆம் திகதி விசேட தினமாக பிரகடணப் படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார அதிகாரி மற்றும் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் வாக்களிப்பதற்காகவே இவ்வாறு குறித்த தினம் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை