இலங்கை கொழும்பை அண்டிய பகுதிகளில் அண்மைய நாட்களில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் ஒரு தொகுதி ஆயுதங்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹேமாகம, பிட்டிபான பகுதியில் வைத்து ஒரு தொகை ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நபருடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பெண்ணிடம் இருந்து 7 கைக்குண்டுகள், 9 மில்லிமீற்றர் அளவுடைய 77 தோட்டாக்கள் மற்றும் 2 உடற்கவசங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.