பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.
தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் குறித்த கலந்துரையாடல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இன்றைய தினம் பிரதமர் மகிந்த ராஜபக்சே கலந்துரையாடல் ஒன்றுக்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையிலேயே துறைமுக ஊழியர்கள் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நேற்றைய தினம் (ஜூலை-02) தற்காலிகமாக இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை, கொழும்பு