Wednesday 8th of May 2024 02:39:57 PM GMT

LANGUAGE - TAMIL
-
மூளையைத் தின்னும் அரிய வகை  அமீபா நோய் குறித்து எச்சரிக்கை!

மூளையைத் தின்னும் அரிய வகை அமீபா நோய் குறித்து எச்சரிக்கை!


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மூளையைத் தின்னும் அரிய வகை அமீபா நோயால் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அமீபா நோய் அரிதானது. 2009 முதல் 2018 வரை அமெரிக்காவில் 34 போ் மட்டுமே இந்த வகை நோயால் பாதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிய நோயாளா் அடையாளம் காணப்பட்ட ஹில்ஸ்போரோ கவுண்டியில் வசிப்பவர்கள் இந்நோய் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு புளோரிடா சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

மிதமான வெப்பநிலையில் உள்ள நல்ல நீரில் அமீபா நோயை ஏற்படுத்தும் கிருமி இருக்கும். மனிதா்கள் குளிக்கும்போதும் புற வழி நீா்த் தொடா்புகள் மூலமும் மூக்கின் ஊடாக இந்தக் கிருமி உடலுக்குள் புகுந்து மூளையை சென்றடையும். பின்னா் இந்த அமீபா மூளையை கொஞ்சம் கொஞ்சமாக தின்னத் துவங்கும். ஆனால் இந்த உணர்வு மனிதர்களுக்கு தெரியாது. அத்துடன் இந்த நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது.

அதனால் ஏரி, குளம், நீச்சல் தடாகங்கள் போன்றவற்றில் குளிக்கும்போது மூக்கின் வழியாக நீர் உள்ளே செல்வதை தவிர்க்கும்படி மருத்துவா்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நோய் ஏற்பட்டால் தலைவலி, காய்ச்சல், வாந்தி கழுத்து வலி ஆகிய அறிகுறிகள் தென்படும் எனவும் அவா்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்.

.அமெரிக்காவில் 1962 ஆண்டுமுதல் 2018 வரை 145 பேர் அமீபா நோயால் பாதிக்கப்பட்டனர். இவா்களில் 4 போ் மட்டுமே உயிர் தப்பியுள்ளனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE