ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் பிரதமர் அமாடோ கோன் கோலிபாலி திடீரென உயிரிழந்துள்ளார்.
நாட்டில் நேற்று புதன்கிழமைக நடைபெற்ற அமைச்சரவை கூட்டமொன்றில் நோய்வாய்ப்பட்ட நிலையில் கலந்துகொண்ட பின்னா் திடீரென அவா் மரணமடைந்தார்.
ஒக்டோபா் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தோ்தலில் ஆளும் கட்சி சாா்பில் 61 வயதான அமாடோ கான் கோலிபாலி போட்டியிட இருந்த நிலையில் திடீரென மரணமடைந்துள்ளமை அந்நாட்டு மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐவரி கோஸ்ட் தற்போதைய ஜனாதிபதி அலசானி ஒட்டாரா மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பமில்லை என்று கூறியிருந்த நிலையில் ஆளும் கட்சி சாா்பில் போட்டியிட கோலிபாலி தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
இரண்டு மாதங்களாக பிரான்சில் தங்கியிருந்து இதய நோய்க்கு சிகிச்சை பெற்ற கோலிபாலி அண்மையிலேயே நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் மரணத்தால் நாடு துக்கத்தில் உள்ளதாக ஜனாதிபதி ஒட்டாரா தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் கோலிபாலி திடீரெனப் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவரது உயிா் பிரிந்துவிட்டது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளாா்.
பிரதமர் கோலிபாலியின் மரணம் ஐவரி கோஸ்ட் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ஒக்டோபரில் திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தோ்தல் உரிய நேரத்தில் நடக்குமா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.