நடைபெறவுள்ள இலங்கை பொதுத்தேர்தல்-2020 இற்கான பிரசார நடவடிக்கையின் போது ஆடை அணிகலன்களில் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஈடுபடுவோரை பிடியாணை இன்றி கைது செய்ய நாடு முழுவதும் உள்ள பொலிசாருக்கு அறிவிறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறை பேச்சாளர் ஜாலிய சேனரட்ன இது குறித்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆடை அணிகலன்கள் மூலம் பிரசாரங்கள் முன்னெடுப்பது தேர்தல் சட்டங்களுக்கு எதிரானது. அவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களை பிடி ஆணை இன்றி கைது செய்வதற்கு சகல காவல்துறை நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் காவ்ற்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை