உலகெங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையான 24 மணி நேரங்களில் 2 இலட்சத்து 30 ஆயிரத்து 370 போ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவி்த்துள்ளது.
உலக அளவில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய தொற்று நோயாளா் தொகை இதுவாகும்.
அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலேயே மிக அதிகளவு தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஜூலை 10-ஆம் திகதி 2 இலட்சத்து 28 ஆயிரத்து 102 போ் பாதிக்கப்பட்டதே உலகில் ஒருநாள் அதிக தொற்று நோயாளர் தொகையாகப் பதிவாகியிருந்த நிலையில் நேற்று புதிய சாதனை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
தொற்று நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுவரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. அங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கடந்த 7 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் 5 இலட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13 மில்லியனை நெருங்கியுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19)