Friday 26th of April 2024 01:09:32 AM GMT

LANGUAGE - TAMIL
-
பீஜிங்கில் கடந்த 10 நாட்களாக  கொரோனா  பரவல் கட்டுப்பாட்டில்!

பீஜிங்கில் கடந்த 10 நாட்களாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டில்!


சீனா தலைநகா் பீஜிங்கில் புதிதாக பரவிய கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நகராட்சி சுகாதார ஆணையம் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை தொடா்ந்து பத்தாவது நாளாக நகரில் புதிய தொற்றுக்கள் எவையும் பதிவாகவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொற்று அறிகுறிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் குறித்தும் தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை.

தொற்றுக்குள்ளாகி குணமடைந்த 23 நோயாளிகள் நேற்று மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

பீஜிங் – ஜின்பாடி மொத்த விற்பனைச் சந்தையில் இருந்து பரவிய புதிய கொரோனா கொத்தை அடுத்து ஜூன் 11 முதல் ஜூலை 15 வரை அங்கு 335 தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.

இவா்களில் 168 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 167 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கொரோனா அறிகுறிகளுடன் 17 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE