மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை வென்று தொடரையும் 2:1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
சுற்றுலா மே.இந்தியத் தீவுகள் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான கட்டத்தில் நடைபெற்ற போட்டியின் இறுதி நாளில் அபாரமான பந்துவீச்சால் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி.
399 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களை கைவசம் வைத்துக் கொண்டு 389 ஓட்டங்களை பெற போராடியது.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களது துல்லியமான பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது அடுத்தடுத்து ஆட்டமிழந்து சென்றனர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள்.இறுதியில் 129 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 269 ஓட்டங்களால் தோல்வியடைந்து தொடரையும் இழந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
குறிப்பாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்ருவட் பிராட் அபராமாக பந்து வீசி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் உள்ளிட்ட முதல் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி வெற்றியை இலகுபடுத்தியிருந்தார்.
அத்துடன் 8.1 ஓவர்கள் பந்து வீசி 36 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 வது விக்கெட் என்ற இலக்கினை அடைந்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டை வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையை பிராட் பெற்றுக் கொண்டார். முன்னதாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 500 விக்கெட்களை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மற்றொரு பக்கமாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு பெரும் நெருக்கடி கொடுத்த வோக்ஸ் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றதுடன் தொடர் நாயகன் விருதை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ரோஸ்டன் காஷ் உடன் இணைந்து பெற்றுக் கொண்டார் பிராட்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து