சர்வதேச விமான போக்குவரத்து 2024-க்கு முன் முழு இயல்புக்குத் திரும்புதற்கான வாய்ப்புக்கள் மிக குறைவு என என்று சர்வதேச விமான போக்குவரத்துக் கழகம் (IATA) தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனாவில், வணிக துறையில் மேம்பாடு காணப்பட்டாலும், அதற்கு ஏற்ற அளவில் விமான போக்குவரத்து துறையில், வளர்ச்சி இல்லை.
அமெரிக்கா மற்றும் வளரும் நாடுகளில் வைரஸை கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கப்போவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு சா்வதேச விமானப் போக்குவரத்து இயல்புக்குத் திரும்ப இன்னும் 3 வருடங்கள் தேவை என முன்னர் சர்வதேச விமான போக்குவரத்துக் கழகம் கருத்து வெளியிட்டிருந்தது.
இப்போது, தொற்று நோய் நெருக்கடி அத்கரித்து வரும் நிலையில் இந்தக் கணிப்பை மேலும் ஒரு வருடம் நீடித்து, 2024 ஆம் ஆண்டிற்கு முன் இயல்பு நிலை திரும்பும் வாய்ப்பு குறைவு என சர்வதேச விமானப் போக்குவரத்து கழகம் கூறுகிறது.
ஏப்ரல் மாதத்தில் முழுமையாக முடங்கிய சா்வதேச விமான போக்குவரத்து, மீண்டு வருவது போல் தோன்றினாலும் அதன் வளர்ச்சி ஆமை வேகத்தில் உள்ளது என சர்வதேச விமான போக்குவரத்துக் கழகத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பிரையன் பியர்ஸ் நேற்று செவ்வாய்க்கிழமை இணைய நேரலை வழியில் இடம்பெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது கருத்து வெளியிட்டார்.