கொழும்பு – மகசின் சிறைச்சாலைக்கு அருகே 2 கிராம் ஹெரோயின், 2 சிம் அட்டைகள் என்பன கழுத்தில் கட்டப்பட்ட நிலையில் பூனை ஒன்று புலனாய்வு பிரிவினால் மீட்கப்பட்டுள்ளது.
பூனையின் கழுத்தில் சிறிய பொதியாக ஹெரோயின் கட்டப்பட்டிருந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர்.
யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு சிறைக்குள் ஹெரோயின் கடத்த இந்தப் பூனை பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெராயின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கழுகு ஒன்றை கடந்தவாரம் பொலிஸார் கைப்பற்றியதுடன், இது தொடா்பில் இருவரைக் கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.