துப்பாக்கி சூட்டு காயங்களுடன் பெண் ஒருவர் சடலாமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அம்பாந்தோடை மாவட்டம் பெலியத்த, தம்முல்லை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று (ஓகஸ்ட்-02) காலை இடம்பெற்றதாகவும் குறித்த பெண்ணின் சடலம் வீட்டு வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பெண் 52 வயதுடையவர் எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.