நடைபெறவிருக்கும் இலங்கை பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நடைமுறை குறித்த முக்கிய அறிவித்ததலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகளில் பல்வேறு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் வாக்களிக்க பயன்படுத்தப்படும் எழுதுகருவியை வாக்காளர்கள் விரும்பினால் பிரத்தியேகமாக எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
வாக்காளர்கள் விரும்பினால் தம்முடன் கருப்பு அல்லது நீல நிற குமிழ்முனைப் பேனாவை எடுத்துச் சென்று வாக்களிக்க பயன்படுத்த முடியும். அவ்வாறு முடியாத நிலையில் வாக்களிப்பு நிலையங்களில் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பேனாக்கள் வழங்கப்படும்.
இவ்வாறு வாக்களிக்க எடுத்துச் செல்லும் பேனாவானது ஏதேனும் ஒரு கட்சி அல்லது வேட்பாளரை ஊக்குவிக்கும் விதமாக எந்தவொரு அடையாளமோ, நிறமோ, சின்னமோ இல்லாது இருக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை