தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 55 ஆயிரத்து 152 ஆக உள்ளதாக தமிழ்நாடு சுகாதார அமைச்சு சற்று முன்னதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சுகாதார அமைச்சு சற்று முன்னதாக (ஓகஸ்ட்-04) வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரத்து 63 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டள்ளனர்.
இதையடுத்து மொதத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 2 இலட்சத்து 68 ஆயிரத்து 285 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை இன்று 108 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 349 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒரு இலட்சத்தை கடந்த தொற்று!
சென்னையில் இன்று ஆயிரத்து 23 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மொத்த தொற்று ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 27 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இதுவரை 2 இலட்சத்து 8 ஆயிரத்து 784 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியதை அடுத்து தற்போது 55 ஆயிரத்து 152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை