நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக அந்த மாவட்டத்திற்கு மணிசரிவ அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.