சீனாவின் ஷாங்காய் நகருக்கு அண்மையில் விமானத்தில் பயணம் செய்த பல பயணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து கொழும்பு- ஷாங்காய் இடையிலான ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளதான சீனாவின் சிவில் விமான ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
எடிஹாட் ஏர்வேஸின் அபுதாபி-ஷாங்காய் விமானம், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் மணிலா-ஷாங்காய் விமான சேவைகளும் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டிஹாட் ஏர்வேஸ் மற்றும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் விமான சேவைகளுக்கான தடை ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் ஒரு வாரம் அமுலில் இருக்கும்.
அதேவேளை கொழும்பு - ஷாங்காய் இடையிலான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் நான்கு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படும் எனவும் சீனா சிவில் விமான ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.