மகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்ய பொதுஜன முன்னணியின் பரபலங்கள் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண முதலமைச்சர் பதவி பெறுவதே அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகிய பிரபல அரசியல்வாதிகளான சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா, ஜோன் செனவிரத்ன, சான் விஜேலால், சந்திம வீரக்கொடி ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
மேலும் முன்னாள் எம்.பி. டிலான் பெரேராவும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை