கொரோனா தொற்று உறுதியான நிலையில் இந்தியாவின் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக கடந்த 14ம் திகதி மருத்துவமனை தரப்பு செய்தி வெளியிட்டிருந்தது.
அதி தீவிர சிகிச்சையின் பலனாக மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளதாகவும் அவ்வப்போது கண் முழித்து பார்ப்பதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே உலகெங்கும் உள்ள பாலசுப்பிரமணியத்தின் கோடிக்கணக்கான இசை ரசிகர்கள் அவர் கொரோனவின் பிடியில் இருந்து மீண்டு வரவேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.பாலசுப்பிரமணியத்தின் நிலை குறித்து இன்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தகவல் வெளியிட்டுள்ளார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுகிறது; மிக தைரியமாக உள்ளோம்; மக்களின் பிராத்தனை எஸ்பிபி-ஐ மீட்டுக் கொண்டு வரும் என அதில் கூறி உள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை