Friday 26th of April 2024 06:10:19 PM GMT

LANGUAGE - TAMIL
-
எஸ்.பி.பியின் உடல் நிலை குறித்த பிந்திய மருத்துவ அறிக்கை!

எஸ்.பி.பியின் உடல் நிலை குறித்த பிந்திய மருத்துவ அறிக்கை!


கொரோனா வைரரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரபல பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடா்ந்தும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக இன்று மாலை எம்.ஜி.எம். மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதி தீவிர சிகிச்சைப் பெரிவில் அவருக்கு தொடா்ந்து செயற்கைச் சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ நிபுணர் குழுவினா் தொடர்ந்து அவரது உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து சிகிச்சை அளித்து வருகின்றனர் எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக எம்.ஜி.எம். மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.சரண் ஊடகங்களுக்கு அறிவித்தார்.

இந்நிலையிலேயே எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடா்ந்தும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக இன்று மாலை எம்.ஜி.எம். மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE