கொரானா தொற்றுநொய் காரணமாக சென்னை - எம்.ஜி.எம். மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை இன்றிரவு 8.30 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்களுடன் எங்களது வைத்தியசாலை மருத்துவ குழவினர் இணைந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலையை கண்காணித்து வருகிறோம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் தொடர்ந்தும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை ஆபத்தான கட்டத்திலேயே உள்ளது. செயற்கைச் சுவாசிக் கருவியின் உதவியுடன் எக்மோ சிகிச்சைகளும் அவருக்கு வழங்கப்பட்டு வருகின்றன எனவும் எம்.ஜி.எம். மருத்துமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.