Friday 26th of April 2024 05:45:08 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு 6 ஆயிரத்து 420 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு 6 ஆயிரத்து 420 பேர் உயிரிழப்பு!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 6 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்பான நாளாந்த நிலவரம் குறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறையினரால் விடுக்கப்படும் அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்றைய தமிழ்நாட்டு கொரோனா தொற்று நிலவரம் குறித்து சற்று முன்னதாக தமிழ்நாடு சுகாதார அமைச்சு நாளாந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இன்றைய தினம் (ஓகஸ்ட்-22) 5 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 73 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 80 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 6 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று புதிதாக ஆயிரத்து 294 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை சென்னையில் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களது எண்ணிக்கை ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 71 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சையின் பின்னர் 3 இலட்சத்து 13 ஆயிரத்து 280 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து தற்போது 53 ஆயிரத்து 710 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE