தமிழ்நாட்டை மிரட்டி வரும் நிலையில், கொரோனா தொற்றும் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றும் 6 ஆயிரத்தை நெருங்கிய தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சுகாதார அமைச்சினால் நாளாந்தம் வெளியிடப்பட்டு வரும் கொரோனா தொற்று நிலவர அறிக்கையின் அடிப்படையில் இன்று (ஓகஸ்ட்-25) 5 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 91 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி 107 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 721 ஆக உயர்வடைந்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகராக விளங்கிவரும் சென்னையில் தொடர்ந்தும் கொரோனா தொற்று ஆயிரத்தை கடந்ததாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் ஆயிரத்து 270 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இதுவரை சென்னையில் தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 949 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சையின் பின்னர் 3 இலட்சத்து 32 ஆயிரத்து 454 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து தற்போது 52 ஆயிரத்து 128 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை