Friday 26th of April 2024 07:21:37 PM GMT

LANGUAGE - TAMIL
-
இங்கிலாந்தின் AZD7442 கொவிட்-19  தடுப்பூசி மனிதப் பரிசோதனை ஆரம்பம்!

இங்கிலாந்தின் AZD7442 கொவிட்-19 தடுப்பூசி மனிதப் பரிசோதனை ஆரம்பம்!


இங்கிலாந்து - அஸ்ட்ரா ஜெனாகா (AstraZeneca) நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல்கட்ட மனிதப் பரிசோதனை நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

AZD7442 எனப் பெயரிடப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி ஆய்வில் இங்கிலாந்தின் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனாகா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்தத் தடுப்பூசி விலக்குப் பரிசோதனை நிறைவடைந்துள்ளது. விலங்குகளிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் இத்தடுப்பூசி சிறப்பாக கொரோனா வைரஸ் தடுப்பாற்றலை உருவாக்குவதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக்காக 18 முதல் 55 வயது வரை உள்ள 48 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் AZD7442 கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த பரிசோதனையில் தடுப்பூசி கொரோனா வைரசை கட்டுப்படுத்தி கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அடுத்த இரண்டு கட்ட பரிசோதனைகளும் துரிதப்படுத்தப்பட்டும் என அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE