Friday 26th of April 2024 09:09:56 AM GMT

LANGUAGE - TAMIL
.
சுயநினைவுடன் சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!

சுயநினைவுடன் சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!


கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்பி;பாலசுப்பிரமணியம் சுயநினைவுடன் மருத்துவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்து வருவதாக பிந்திய மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை சீராகவும் முன்னேற்றமடைந்தும் வருவதாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள MGM வைத்தியசாலை அறிவித்துள்ளது.

இது குறித்து சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது அவருடைய உடல் நிலை சீராக காணப்படுவதாகவும், அவர் சுயநினைவுடன் மருத்துவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமையாலும் அவருடைய உடல் நிலை முன்னேற்றம் அடைந்துவருவதாகவும் தெரிவித்துள்ள வைத்தியசாலை நிர்வாகம், அவரைத் தொடர்ந்தும் மருத்துவக் குழு கண்காணித்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE