கொரோனா தொற்று நோய் தொடர்பில் உண்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் சீனா செயற்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் இன்று செவ்வாய்க்கிழமை கூறினார்.
தொற்று நோயைத் தொடர்ந்து உலகெங்கும் பல்லாயிரக் கணக்கானவா்களின் உயிர்களைக் காப்பாற்ற உதவும் வகையில் சீனா உறுதியான முயற்சிகளை எடுத்ததாகவும் அவா் தெரிவித்தார்.
சீனாவில் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தின்போது முன்மாதிரியாகச் செயற்பட்டவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசியபோதே ஜி ஜின்பிங் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொற்று நோய் நெருக்கடியின் மத்தியிலும் பொருளாதார வளர்ச்சியைக் காண்பித்த முதல் பெரிய பொருளாதார நாடு சீனாதான் எனவும் அவர் பெருமிதம் வெளியிட்டார்.
இதன்மூலம் நாட்டின் வலுவான திறன்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா