Friday 26th of April 2024 05:56:38 AM GMT

LANGUAGE - TAMIL
-
தனிமைப்படுத்திக்கொண்ட பிரான்ஸ்  பிரதமரிடம்  கொரோனா  பரிசோதனை!

தனிமைப்படுத்திக்கொண்ட பிரான்ஸ் பிரதமரிடம் கொரோனா பரிசோதனை!


பிரான்ஸ் பிரதமருடன் அண்மையில் இணைந்து பயணம் செய்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதையடுத்து பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

முன்னெச்சரிக்கையாக பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ்க்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. எனினும் உடனடிப் பரிசோதனையில் அவருக்குத் தொற்று இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

டுவர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தய இயக்குனருடன் இணைந்து கடந்த சனிக்கிழமை ஒரே காரில் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் பயணம் செய்தார்.

இந்நிலையில் பிரதமருடன் பயணம் செய்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்தே பிரதமர் 7 நாட்கள் தனிமையாக இருப்பார் என்று பிரெஞ்சு பிரதமர் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முதற்கட்டப் பரிசோதனையில் பிரதமருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

டுவர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தய இயக்குனருடன் இணைந்து கடந்த சனிக்கிழமை ஒரே காரில் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் பயணம் செய்தபோதும் இருவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை மதித்தே நடந்துகொண்டனர் எனவும் பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE