அரசமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காகப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழுவின் அறிக்கை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"20ஆவது திருத்தச் சட்டமூலம் தற்காலிக நடவடிக்கை என ஜனாதிபதி தெரிவித்தார். புதிய அரசமைப்பு துரித வேகத்தில் முன்வைக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
மக்களுக்கு ஏற்ற அரசமைப்பை தயாரிப்பதற்காக எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்" - என்றார்.