Thursday 25th of April 2024 08:17:17 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஒரே நாளில் ஒரு இலட்சம் தொற்று: கொரோனாவின் பிடிக்குள் திணறும் இந்தியா!

ஒரே நாளில் ஒரு இலட்சம் தொற்று: கொரோனாவின் பிடிக்குள் திணறும் இந்தியா!


கொரோனாவின் பிடிக்குள் சிக்கி திணறிவரும் இந்தியாவில் ஒரே நாளில் ஒரு இலட்சம் புதிய தொற்றுகள் இனம்காணப்பட்டுள்ளது.

இன்று செப்-17 காலை 8.00 மணிக்கு நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 97 ஆயிரத்து 894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 51 இலட்சத்து 18 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை ஆயிரத்து 132 ஆக உள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 198 ஆக உயர்வடைந்துள்ளது.

அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் 11 இலட்சத்து 21 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 30 ஆயிரத்து 883 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஆந்திரபிரதேசத்தில் 5 இலட்சத்து 92 ஆயிரத்து 760 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 5 ஆயிரத்து 105 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 559 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் 5 இலட்சத்து 19 ஆயிரத்து 860 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து 40 இலட்சத்து 25 ஆயிரத்து 79 பேர் வெளியேறியுள்ளதை அடுத்து தற்போது 10 இலட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, புது தில்லி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE