நுவரெலியா - இராகலை நகரில் அமைந்துள்ள வர்த்தக கட்டடத் தொகுதியொன்றில் ஏற்பட்ட தீ பரவலில் மூன்று கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள இத் தீபரவல் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
நுவரெலியா இராகலை நகரில் ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்துக்குச் செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள கட்டடத் தொகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா மாநகர சபை தீயணைப்புப் பிரிவினரும், இராகலைப் பொலிஸாரும், பிரதேச பொதுமக்களும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும், பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன. எவ்வாறாயினும் தீ விபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக இராகலைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.