O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதை அடுத்து குறித்த உயிரிழப்பு தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இரத்தினபுரி மாவட்டம், பலங்கொட - பின்னவலவத்த பிரதேசத்தில் நேற்று மாலை பாடசாலை மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இம்முறை ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவிருந்த 16 வயது மாணவியே அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியன் தாயார் வெளியே சென்றிருந்த நிலையில் நேற்று மாலை வீடுதிரும்பிய போதே கட்டிலுக்க அருகில் மகள் உயிரிழந்திருந்த நிலையில் காணப்படுவதை கண்டுள்ளார்.
இதையடுத்து அயலவர்களது உதவியுடன் பலாங்கொடை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியகளால் தெரிவிக்கப்பட்டது.
இவரது மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. குறித்த மாணவி படுகொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகத்துக்கு மத்தியில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.