உயிரிழந்த ஒருவரின் சடலத்தை எரியூட்டிய போது மின் தகனசாலையில் சமையல் எரிவாயு வெடித்து சிதறியதால் தீக்காயங்களுக்கு உள்ளான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு ஹெட்காவத்தையில் பொது மயானத்தில் உள்ள மின் தகனசாலையில் சடலம் ஒன்றை தகனம் செய்யும் போதே இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மின் தகனசாலையில் பொருத்தப்பட்டிருந்த சமையல் எரிவாயு வெடித்ததாலே இவ் அநர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகனம் செய்யும் போது அருகில் நின்றிருந்த ஏழு பேர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.