மேல் மாகாணம்,சப்ரகமுவ மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின், சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேபோல் வடக்கு, வடமத்திய, கிழக்கு ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளிலும் அவ்வப்போது மழை பொழிய கூடும் என கூறப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் 50 மில்லமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.