Friday 26th of April 2024 10:46:26 AM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தியாவில் கொரோனா தொற்று நோயாளர்  தொகை 74 இலட்சமாக  உயர்வு!

இந்தியாவில் கொரோனா தொற்று நோயாளர் தொகை 74 இலட்சமாக உயர்வு!


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 இலட்சத்தை எட்டியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை வரையான கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 63,371 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, கடந்த 24 மணி நேரங்களில் 895 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த கொரோனா மரணங்கள் 112,161 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்து பதிவானது.

ஞாயிற்றுக்கிழமை வரையான வெறும் 13 நாட்களில் மட்டும் 10 இலட்சத்தால் தொற்று நோயாளர் தொகை அதிகரித்தது.

அமெரிக்காவில் தொற்று நோயாளர் தொகை 80 இலட்சத்தை இன்று எட்டியுள்ள நிலையில் அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் அதிக தொற்று நோயாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE