Friday 26th of April 2024 08:25:36 PM GMT

LANGUAGE - TAMIL
-
காஞ்சிரமோட்டை மக்களுக்கு மின்சாரம் உட்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு!

காஞ்சிரமோட்டை மக்களுக்கு மின்சாரம் உட்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு!


வவுனியா காஞ்சிரமோட்டை கிராம மக்கள் எதிர்கொண்டு வந்த பிரச்சனைகளுக்கு காணி அமைச்சருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரிடம்கேட்டபோது,

வவுனியா காஞ்சிரமோட்டைகிராமமக்கள் மீள்குடியேறி பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக எனது கவனத்திற்குகொண்டு வரப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் அமைச்சர்டக்களஸ் தேவானந்தாவுக்கு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டு அவர் ஊடாக இன்று காணிஅமைச்சருடன் விசேட கலந்துரையடல் மேற்கொள்ளப்பட்டது.

இதன் பிரகாரம் அம் மக்களுக்கு மின்சாரத்தினை கொண்டு செல்வதில் வன இலாகா ஏற்படுத்தும் தடைகள் குறித்து தெரிவிக்கப்பட்டதையடுத்து உடனடியாக வன இலாகா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்புகொண்டு இம் மக்களுக்கு மின்சாரத்தினை வழங்குவதற்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்கி மின்சாரத்தினை வழங்க ஏதுவான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இம் மக்கள் தொடர்ச்சியாக யானைப்பிரச்சனைக்கு முகம் கொடுத்து வருவதனால் யானை வேலி அமைப்பதற்கும்ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே மிக விரைவில்இம்மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு ஏதுவான வழிவகைகள் செய்து கொடுக்கப்படும் எனவும்அவர் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE