கனடா- அமெரிக்கா எல்லைக் கட்டுப்பாடு மீண்டும் நவம்பர் 21 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளிலும் தொற்று நோயின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கனடா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
கனேடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் பொது சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளுக்கு அமைய எங்கள் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் கனடா - அமெரிக்க எல்லைகள் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த எல்லை மூடல் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களுக்காக எல்லைகள் மூடப்பட்டுள்ளபோதும் வர்த்தகம் நடவடிக்கைகளுக்காக எல்லைகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.