அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பாம்பியோ எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கை பயணமாகவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மைக் பாம்பியோ இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா செல்லவுள்ள நிலையில் இலங்கை வருகை தரவுள்ளார் என்றும் இருதரப்புப் பேச்சுக்களில் அவர் பங்கேற்பார் என்றும் கெஹெலிய தெரிவித்துளளார்.