Friday 26th of April 2024 05:56:12 AM GMT

LANGUAGE - TAMIL
-
குளியாப்பிட்டிய பிரதேசத்திற்கு உட்பட்ட ஐந்து பகுதிகளுக்கு சமூக முடக்கல் நிலை!

குளியாப்பிட்டிய பிரதேசத்திற்கு உட்பட்ட ஐந்து பகுதிகளுக்கு சமூக முடக்கல் நிலை!


கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குளியாப்பிட்டிய பிரதேசத்திற்கு உட்பட்ட ஐந்துபகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய பிரதேசத்துக்கு உட்பட்ட குளியாப்பிட்டிய, நாரம்மல, பன்னல, கிரிஉல்ல, தும்மலசூரிய ஆகிய பகுதிகளுக்கே குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிய 60 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 35 பேர் கட்டுநாயக்க பகுதியில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் பணியாற்றிவருபவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE