கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களை அனுமதிப்பதற்கு ஏதுவாக 3500 படுக்கைகளுடன் 30 வைத்தியசாலைகள் நாடெங்கும் தாயார் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று நோய் நெருக்கடி தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடும்போதே அவா் இவ்வாறு கூறினார்.
அத்துடன் நாளொன்றுக்கு சுமார் 8,000 கொரோனா பரிசோதனைகளை முன்னெடுக்கக்கூடிய வளம் சுகாதார அமைச்சிடம் தற்போது உள்ளதாகவும் அவா் தெரிவித்தார்.