மத்திய ஆப்பிரிக்க நாடான கமரூனில் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 14 வதுக்குட்பட்ட குறைந்தது 6 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் எட்டு பேர் காயமடைந்தனர்.
சிவில் உடையில் உந்துருளியில் வந்த தீவிரவாதிகள் தென்மேற்கு பிராந்தியத்தின் கும்பா நகரில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் நேற்று சனிக்கிழமை மதியவேளை புகுந்து இவ்வாறு வெறித்தனத்தில் ஈடுபட்டனர்.
தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு அஞ்சி சில மாணவர் பாடசாலை இரண்டாவது மாடிக் கட்டத்தில் இருந்து குதித்துக் காயமடைந்தனர்.
கமரூனில் மேற்கில் ஆங்கிலம் பேசும் மக்களைக் கொண்ட அம்பாசோனியா என்ற தனிநாடு கோரிப் போராடிவரும் பேராட்டக் குழுக்களுக்கும் கமரூன் இராணுவத்திற்கும் இடையே இடம்பெற்று வரும் போராட்டத்தின் பி்ன்னணியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதா? என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.
பிரிவினைவாதிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையே கமரூன் மேற்குப் பிராந்தியத்தி்ல் 2017 முதல் தொடரும் மோதல்கள் காரணமாக நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். பல சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.