இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கொழும்பு 02, கொம்பனித் தெரு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
அவர் 70 வயதுடைய நபர் என்றும் காய்ச்சல் காரணமாக 23ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வாரத்தில் 03 ஆவது கொரோனா மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19)