கொரோனா வைரஸ் தொற்று நோய்க்குப் பிந்தைய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வது குறித்தும் இலங்கை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிலையான மற்றும் வெளிப்படையான வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவது பற்றியும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் பேசப்பட்டதாக அமெரிக்க வெளியுவுச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது உள்ள மைக் பொம்பியோ இலங்கை ஜனாதியுடனான சந்திப்புக் குறித்து சற்று முன்னர் வெளியிட்டுள்ள ருவிட்டர் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.