மியான்மரில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி மீண்டும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது.
ஆட்சி அமைக்க 322 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக லீக் இன்றுவரை 346 இடங்களை வென்றுள்ளது.
தோ்தல் ஆரம்பகட்ட முடிவுகள் வெளியாக ஆரம்பித்த நிலையிலேயே ஆங் சான் சூகி தலைமையிலான கட்சி வெற்றி பெற்றதாக அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் உத்தியோகபூர்வ தோ்தல் முடிவுகள் அவா்களின் வெற்றியை உறுதி செய்துள்ளன.
ஆனால் இராணுவ ஆதரவுடைய எதிர்க்கட்சி தேர்தலை மீண்டும் நடத்தக் கோரியுள்ளது.
இதேவேளை, ஆங் சான் சூகி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதற்கு இந்தியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.