தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் மூத்த போராளி கப்டன் பண்டிதரின் இல்லத்தில் மாவீரர் வாரத்தின் தொடக்க நாள் நிகழ்வுகள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் சற்று முன்னர் நடைபெற்றுள்ளன.
முன்னதாக பண்டிதரின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.
அங்கு கருத்துத் தெரிவித்த சுமந்திரன்,
மாவீரர்களை அனைவரும் தனிப்பட்ட ரீதியில் வீடுகளில் நினைவு கூரவேண்டும். அதற்கு எவரும் பின்நிற்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
வணக்க நிகழ்வில் பண்டிதரின் தாயார், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் உட்பட்டவர்கள் பங்குகொண்டிருந்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம்